Thursday, August 14, 2014
நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெறவேண்டும் என்று சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
லட்சியம் வேண்டும்
சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒரு மரக்கன்றினை வழங்கி, ‘‘அறிவு அற்றம் காக்கும்’’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பூமிக்கு கீழே பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைவிட மன எழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப்பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. எனவே மக்கள்தொகை இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து ஆகும்.
ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவை பெற அதை தேடிச் செல்லுங்கள். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும். இந்த 4 குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது.
கனவு காணுங்கள்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கிறது. அறிவு நம்மை மகானாக ஆக்குகிறது. கற்பனை சக்தியை உருவாக்குவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரின் மனதிலும் தூய்மை வேண்டும். வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
இளைஞர்கள் தோல்வி மனப்பான்மை, தவறான செய்திகள், ஊழல் சிந்தனை மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தங்களது லட்சியம் வெற்றி பெற கனவு காண வேண்டும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் உயர்வாக இருந்தால் அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியங்கள் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
எழுச்சி பெறுக!
நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். மாணவ, மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் சிந்தனை வளர்க்கும் திறனை கல்வி நிறுவனங்கள் தூண்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி, ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ஜி.ராஜன், கல்லூரி முதல்வர் வஜ்ரவேல், சோபனா ராஜன், தொழில் அதிபர் சாந்தி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
0 comments:
Post a Comment