Thursday, August 14, 2014
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல்
பான்பராக், குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திடீர் சோதனை
இதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி தலைமையில், உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் முத்து கிருஷ்ணன், பூபாலன் ஆகியோர் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் கொங்காலம்மன் கோவில் பகுதிகளில் உள்ள 80 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ரூ.30 ஆயிரம்
இதனைத்தொடர்ந்து அவற்றினை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,‘ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
0 comments:
Post a Comment