Thursday, August 14, 2014
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டிலும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.
விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஒத்திகை
இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம், சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடம், பவானி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம், திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூடம், ரங்கம்பாளையம் கொங்கு பள்ளிக் கூடம், திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கூடம், இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூடம், கிறிஸ்து ஜோதி மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,535 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடன கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை செய்தனர். இந்த கலை நிகழ்ச்சி ஒத்திகையை ஈரோடு ஆர்.டி.ஓ. குணசேகரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக் குமார், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி கீதா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment