Thursday, August 14, 2014
சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டிலும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.
விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஒத்திகை
இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம், சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடம், பவானி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம், திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூடம், ரங்கம்பாளையம் கொங்கு பள்ளிக் கூடம், திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கூடம், இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூடம், கிறிஸ்து ஜோதி மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,535 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடன கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை செய்தனர். இந்த கலை நிகழ்ச்சி ஒத்திகையை ஈரோடு ஆர்.டி.ஓ. குணசேகரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக் குமார், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி கீதா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment