Saturday, August 16, 2014
நமது இந்திய திருநாடு 1947–ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15–ம் நாள் சுதந்திரம் பெற்றது. அந்த நாள் இந்திய வரலாற்றில் பல சிறப்புகளை கொண்டது.
உலகமே உறங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா விழித்தெழுகிறது என ஆகஸ்ட் 15 ஆம் நாள் பண்டித ஜவகர்லால் நேரு கூறினார்.
சுதந்திரம் பெற்றபோது, நமது மதுரை ஆதீனத்தில் 290–ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் அருளாட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆதீன அன்பர்கள் நால்வரை தேர்வு செய்து அவர்களிடம் திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய கோளறு திருப்பதிகம், ஆதீன வரலாறு, திருநீற்று பிரசாரம, சாதரா, தங்கம் கட்டி 108 உத்திராக்கம் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்பி வைத்து, பண்டித ஜவகர்லால் நேருவுக்கு சிறப்பு செய்தார்கள். இந்நிகழ்வு மதுரை ஆதீனத்திற்கும் பண்டி நேருவுக்கும் பெருமிதமான மகிழ்ச்சியான காட்சியாக இருந்தது.
1769–ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 15 ஆம் நாளில் தான் மாவீரன் நெப்போலியன் பிறந்தான். 1914–ம் ஆண்டு பிரமாண்டமான பனாமா கால்வாய் திறக்கப்பெற்றது. 1948–ல் முதன் முதலாக காந்தியடிகளின் உருவம் பொறிக்கப் பெற்ற நினைவு அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டது. 1960 ஆம் ஆண்டு காங்கோ நாடு சுதந்திரம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாடு சுதந்திரம் பெற்றது.
மேலும் பாரத மாதாவுக்கு முதல் முதலில் கோவில் எழுப்பி சிறப்பு செய்தார், சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா. ஒரு பெண்மனி விடுதலை போராட்ட முதுபெருந் தலைவி என்று அழைக்கப் பெற்றார். அவர்தான் அருணா ஆசப் அலி.
ஆச்சார்ய வினோபா பாவே பூமிதான இயக்கத்தை தொடங்கினார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு, இன்னமும் கோவை மத்திய சிறையில் பாதுகாப்பாக வைக்கப் பெற்றுள்ளது.
வீரர் வாஞ்சிநாதன் தமிழ்நாட்டின் பகத்சிங் என அழைக்கப்பெற்றார். இப்படி நமது நாட்டின் சுதந்திர பெருமையை அடுக்கி கொண்டே போகலாம்.
எல்லோர்க்கும் சுதந்திர தின நல்லாசிகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment