Thursday, August 14, 2014
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி ஈரோடு வருகை தந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிறகு அவர் மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறைக்கு சென்றார். பாய்ந்து செல்லும் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வழிபட்டார்.
வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்துக்கு முதன் முறையாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. எனக்கு இது வருத்தத்தை கொடுத்து உள்ளது.
நவராத்திரி தினத்தில் உலக நன்மை வேண்டி இந்தியா முழுவதும் யாகங்கள் நடத்தப்படும். அதுபோல ஈரோட்டிலும் யாகங்கள் நடத்த வேண்டும். இதனால் அனைத்து நலன்களும் நமக்கும் கிடைக்கும்.
வன்முறை சம்பவங்கள் பெருகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். வன்முறை அமைப்புகளுக்கு பொது மக்கள் செல்வதையும் தடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுக்கு மேலாக மத ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் பண்பாடு இருந்து வருகிறது. எனவே ஒற்றுமையாக நாம் வாழ்ந்து வன்முறையை அறவே தவிர்க்க வேண்டும் பூரண மதுவிலக்கையும் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும். மதுவால் கிராமப்புற பெண்கள் மிகவும் துயரம் அடைந்து உள்ளனர்.
வாழும் கலை குடும்பம் சார்பில் மரங்கள் வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் நல்ல மழை பெய்ய நாம் அனைவரும் அதிகளவில் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும்.
இவ்வாறு ரவிசங்கர் குருஜி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது26). இவரது மனைவி பானுபிரியா(25). இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் வே...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment