Saturday, September 13, 2014
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உத்ரா (வயது 28). இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கோவை கணபதி மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்–தேவிகாவின் மகன் சதீஷ்பாபுவுக்கும் (35) எனக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்பாபு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாக என்னிடம் கூறினார்கள். திருமணம் முடிந்த பின்பு சதீஷ்பாபு என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றபோதுதான் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நான் கோவை வந்துவிட்டேன். பின்னர் இதுகுறித்து எனது மாமனார்–மாமியாரிடம் கேட்டபோது, நீ எனது மகனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் நந்தகோபால், தேவிகா மற்றும் சதீஷ்பாபு ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான நந்தகோபால், தேவிகா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment