Monday, September 22, 2014
அவினாசி புதிய பஸ் நிலையத்தில் அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் (வழித்தட எண் 32) டி.என்.38எண்1462 என்ற அரசு பஸ்சில் பொதுமக்கள், கல்லூரி மாணவ–மாணவிகள் உள்பட பலர் ஏறினர். கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து வந்தார்.
அவினாசியில் இருந்து திருப்பூர் செல்வதற்கு 8 ரூபாய் டிக்கெட்டை பயணிகளுக்கு கொடுத்துள்ளார். இதில் சில பயணிகள் கூடுதலாக பயணக்கட்டணம் கேட்பதாக கூறி சீட்டை வாங்க மறுத்தனர். அவினாசியில் இருந்து திருப்பூர் செல்ல கட்டணம் 5 ரூபாய் மட்டும்தானே, எதற்காக அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என கண்டக்டரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே பயணிகள் அவினாசி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘இவ்வழியே இயங்கும் அனைத்து பஸ்களும் சாதாரண பஸ்களே. எனவே சாதாரண கட்டணம் தான் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தினர் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக் கின்றனர்.
இவர்கள் கேட்கும் கட்ட ணத்திற்கான ஆணை எதையும் அரசு வழங்கவில்லை. இதை அறியாமல் பயணிகள் ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்திலிருந்து, தகவலை பெற்று போக்குவரத்து நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது எனவே அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப் பிரமணியம் ஆகியோர் சம்பவ இடம் வந்து அதிக கட்டணம் வசூல் செய்யும் பஸ்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளை சமரசம் செய்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
0 comments:
Post a Comment