Thursday, September 11, 2014
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் ஜோதிநகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ்(வயது 22). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 மாத காலமாக சந்தோஷ் தீராத தலைவலியால் அவதிப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் தலைவலி குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சந்தோசின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தோஷ் தற்கொலை செய்யும் முன்பு வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அப்பா என்னை மன்னித்து விடுங்கள். இந்த உலகத்தை விட்டு நான் செல்கிறேன். என்னால் தலைவலியை தாங்க முடியவில்லை. வெளியே சொல்லவும் முடியவில்லை. எந்த சிகிச்சை பெற்றாலும் எனக்கு வந்துள்ள தலைவலி குணமாக வாய்ப்பில்லை. எனவே என் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சந்தோசின் உடலைப் பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment