Thursday, September 11, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகேயுள்ள இச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(வயது 17). இவர் காங்கயம்–தாராபுரம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.
புவனேஸ்வரியின் தம்பி மதன்குமார் அதே பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பினார். வேலைக்கு சென்ற பெற்றோரும், டியூசனுக்கு சென்ற தம்பியும் வீடு திருமப்பவில்லை.
வீட்டில் தனியே இருந்த புவனேஸ்வரி திடீரென்று வீட்டின் குளியல் அறைக்கு சென்றார். அங்கு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
வீடு திரும்பிய பெற்றோர் மகளை காணாது திடுக்கிட்டனர். குளியல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. புவனேஸ்வரி கரிக்கட்டையாய் கிடப்பதைப்பார்த்து அலறி துடித்தனர்.
சம்பவம் குறித்து ஊதியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உடலைக்கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் புவனேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். வீட்டில் மாணவி ஏதும் கடிதம் எழுதி வைத்து இருக்கிறாரா? என்று சல்லடை போட்டு தேடினார்கள்.
அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. விசாரணைக்கு பின்னர் கடிதத்தில் மாணவி எழுதிய தகவலை தெரிவிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரை முற்றுகையிட்டு புவனேஸ்வரி கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறாள் என்று கூறவேண்டும். அதன் அடிப்படையிலேயே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
கண்டிப்பாக கடிதத்தின் அடிப்படையில்தான் விசாரணை நடைபெறும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன் பின்னரே அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
மாணவி தீக்குளித்து இறந்த சம்பவத்தையொட்டி அவர் படித்த பள்ளிக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த ஏதேனும் சம்பவம் காரணமாக மாணவி தற்கொலை செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment