Tuesday, September 16, 2014
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றுள்ளனர்
சிறுத்தைப்புலி நடமாட்டம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதியில் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப்புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அமராவதிநகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தைபுலி கொடூரமாக கடித்து கொன்றுள்ளது. மேலும் வன அதிகாரி வீட்டில் உள்ள நாய்க்குட்டியை கடித்து இழுத்து சென்று உள்ளது.
கூண்டு
மேலும் பல இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலியின் நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலியை பிடிக்க கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற இடத்திற்கு சற்று தொலையில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தைப்புலியை பிடிக்க ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்துள்ளனர். அமராவதி நகர் பகுதி மக்களை பீதிக்கு உள்ளாகி வரும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment