Monday, September 15, 2014
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment