Saturday, September 13, 2014
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் பசுமலை பராக்கா நகர் பகுதியில் தண்டவாளத்தை அந்த ரெயில் கடக்கும்போது திடீரென ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது. ஆனாலும் என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக ரெயிலை ஓட்டி திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினார்.
அங்கு ரெயில்வே அதிகாரியிடம், பசுமலை பராக்கா நகர் பகுதியில் ரெயில் வரும்போது ஒரு மாதிரியாக சத்தம் கேட்டது என்னவென்று தெரியவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு புறப்பட்டார்.
ரெயில்வே அதிகாரி உடனே மதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதி தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் கிடந்தன. அதனை அப்புறப்படுத்தி விசாரணையை தொடங்கினர்.
ரெயிலை கவிழ்க்கும் சதி நோக்கத்தில் இந்த மாதிரி இரும்பு கம்பிகளை தண்டவாளத்தில் யாரும் போட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பசுமலை பகுதியில் நடந்து வரும் கட்டிடப் பணிக்கு பயன் படுத்தப்பட்ட கம்பிகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் செல்லும்போது தண்டவாளத்தில் சிதற விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
இரும்பு கம்பிகளை திருடிய ஆசாமிகள் யார்? தண்டவாளத்தில் தானாக அவைகள் விழுந்ததா? அல்லது வேண்டுமென்றே போட்டுச் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment