Saturday, September 13, 2014
சோழவந்தானில் நூலகம் கடந்த 1958–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் போட்டித் தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், கலை, இலக்கியம், கவிதை, கட்டுரை, வரலாறு, புவியியல், மற்றும் குடும்ப பெண்கள், மாணவிகள் படிக்கும் நாவல்கள், சிறுகதைகள், சிறுவர்களுக்கு தேவையான நீதிக்கதைகள், என்சைக்ளோபீடியா, கம்யூட்டர் சம்பந்தமான ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இந்த நூலகத்திற்கு தினசரி இதழ்கள்–6, வார இதழ்கள்–8, மாத இதழ்கள்–69, காலாண்டு இதழ்–2 மற்றும் தபால் மூலம் 14 இதழ்களும் வருகின்றன. நூலக உறுப்பினர்களாக சுமார் 3700 பேர் உள்ளனர். முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவம், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்பட 38 பேர் புரவலராக உள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 140 வாசகர்கள் வந்து செல்கின்றனர்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த நூலகம் 1985–ம் ஆண்டு இரண்டாம் நிலை நூலகமாக மாறியது. கடந்த 2006 முதல் வாடிப்பட்டி தாலுகா நூலகங்களுக்கு “ஊதியம் வழங்கும் மையமாக” செயல் பட்டு வருகிறது. நிரந்தரம் மற்றும் தினக்கூலி பணியாளர்களாக 4 பேர் உள்ளனர்.
கடந்த சில ஆண்டிற்கு முன் இங்கு வந்த கம்யூட்டர் இணைய வசதி போதிய இடவசதி இல்லாமல் மற்றொரு நூலகத்திற்கு திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பழைய கட்டிடமாக உள்ளதால் மழை காலங்களில் ஒழுகி புத்தகங்கள் நனையும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து சட்ட மன்ற உறுப்பினர் கருப்பையாவிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு புதிய கட்டி டம் கட்டி தர, நூலகர் ஆறுமுகம் மூலம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற கருப்பையா எம்.எல்.ஏ., “நான் சட்டமன்ற நூலக குழு உறுப்பினராகவும் உள்ளதால் தமிழக முதல்வரிடமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடமும் எடுத்துக்கூறி விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர் செல்லப்பாண்டி, யூனியன் சேர்மன் அன்னக் களஞ்சியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment