Saturday, September 13, 2014
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு வாலிபர் பச்சிளம் ஆண் குழந்தையுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகிறது. எடை குறைவாக உள்ளது. மேலும் நோய் தாக்கப்பட்டுள்ளதாக கூறி அக்குழந்தையை ஆஸ்பத்திரியின் 155–வது வார்டில் சேர்த்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அந்த குழந்தை மட்டும் வார்டில் இருந்தது. குழந்தையை கொண்டு வந்த வாலிபரை காணவில்லை.
அப்போது அங்குள்ள ஊழியர்கள் தேடி வந்த நிலையில் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்தனர். குழந்தையின் தாயை அழைத்து வருவதாக கூறி சென்ற அந்த வாலிபர் இன்று காலை 10 மணி வரை திரும்பவில்லை. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பரமக்குடி முஸ்லிம் தெரு சைரா பானு என்ற விலாசம் கொடுத்திருந்தார்.
தனது பெயர் நிஜாம் என்றும், 2 செல்போன் எண்களையும் கொடுத்து இருந்தார். ஒரு எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது போனில் பேசிய ஆசாமி தனது பெயர் சாகுல்அமீது, புதுக்கோட்டை என்றார்.
பின்னர் அந்த வாலிபர் போலீசாரிடம் கூறியதாவது:–
எனது நண்பர்தான் நிஜாம். டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இதனை தொடர்ந்து அவர் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தார். அந்த குழந்தை எடை குறைவாக இருந்ததால் அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகும் என்பதால் குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று இரவு கொண்டு வந்துள்ளார். குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நிஜாம் குழந்தையை போட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
இவ்வாறு அவர் போனில் தெரிவித்துள்ளார்.
போனில் சாகுல்அமீது கூறிய தகவல் உண்மையானதுதானா? குழந்தையை போட்டு விட்டு சென்ற நிஜாம் எங்கு சென்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பச்சிளம் குழந்தையை வாலிபர் ஆஸ்பத்திரியில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment