Tuesday, September 16, 2014
உடுமலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவசிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க.
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம் தலைமை தாங்கினார். அங்குள்ள அண்ணாவின் உருவசிலைக்கு மடத்துக்குளம் தொகுதி சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் ஏ.கே.மனோகரன், கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.வாசுதேவன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, துணைச்செயலாளர் எம்.முருகவேல், கவுன்சிலர் ஜி.தனலட்சுமி, ஜெ.ஹரிபிரசாத், ஜெ.மணிவண்ணன், பாபு, கணியூர் நடராஜ், பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு நகர செயலாளர் சி.வேலுச்சாமி தலைமை தாங்கி உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், நகர கழக அவைத்தலைவர் இந்துபாய் என்கிற சாகுல்அமீது, துணை செயலாளர் வக்கீல் எம்.வெங்கடாசலம், பொருளாளர் டி.ஜவஹர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கராஜ் என்கிற மெய்ஞான மூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் தா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், முபாரக் அலி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்பாசாமி, பாலசுப்பிரமணியன், ஆதம்ஸா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
-
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தமைக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் ஆகஸ்ட் 22-ஆம...

0 comments:
Post a Comment