Wednesday, September 03, 2014
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார். ஆனால் ஒப்பந்ததை காட்டி எங்களை கழற்றி விட முடியாது என சுபாஸ்கரன் தரப்பில் விஜய்யிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக முதல்வரை நேரில் சந்தித்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என விஜய் நினைத்தார். ஆனால் தமிழக முதல்வர் தரப்பிலிருந்து, விஜய்க்கு தொடர்ந்து ரெட் சிக்னல் விழுந்துள்ளது.
வேறு வழியே இல்லை கத்தி படத்தின் பணிகளை நிறுத்திவிடலாம் என விஜய், முருகதாசிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லைக்காவின் சுபாஸ்கரன், ‘உங்கள் மனைவியின் தந்தை லண்டனில் தான் வசிக்கின்றார் உங்களுக்கு நினைவில்லையா’ எனக் கூறியுள்ளார். லண்டனில் ஆளும் கட்சிக்கு அதிக அளவில் நிதி வழங்கியதால் அங்கு செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுகின்றார் சுபாஸ்கரன். எனவே சுபாஷ்கரனை எதிர்த்து விஜய்யால் லண்டனின் ஒன்றும் செய்யமுடியாது. எனவே, விஜய்யின் மாமனார் சொர்ணலிங்கம் லைக்காவின் பிடியில் வசமாக சிக்கியுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த விஜய்யின் மனைவி கவலையில் உள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ ராஜபக்சேவின் வலையில் சிக்கிவிட்டார் விஜய். அவர்களுக்கு சாதகமாக நடக்கும் பட்சத்தில் தமிழர்களின் விரோதியாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே ஈழம், ஈழம் என கூவிவந்த சைமன் ராஜபக்சேவின் கூட்டாளியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment