Saturday, September 13, 2014
மதுரை ரெயில் நிலையம் தென் தமிழ்நாட்டில் மிக பெரிய ரெயில் நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலை காண வெளி மாநிலத்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி நாட்டினரும் ரெயில் மூலம் மதுரை வருகிறார்கள்.
இப்படி பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளோடு பயணிகளாக நாய்கள் சுற்றி திரிவதும், பயணிகள் தங்கும் இடத்திலேயே சுதந்திரமாக படுத்து தூங்குவதுமாக இருக்கிறது.
கிழக்கு நுழைவு வாயில் வழியாக அவசர அவசரமாக செல்லும்போது நாய்கள் மீது பயணிகள் மிதித்து விட்டால் கடிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகள் குழந்தைகளுடன் ஓய்வு எடுக்கும் இடத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிவதால் எப்போது யாரை கடிக்கும் என்ற அச்சநிலை பயணிகளிடையே நிலவி வருகிறது.
ரெயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கும் நிலையில் இந்நாய்களை மட்டும் எப்படி உள்ளே அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது குறித்து பயணிகள் ரெயில் நிர்வாகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரெயில் நிலையத்திற்குள் நுழையும் நாய்களை எங்கள் ஊழியர்கள் விரட்டியடித்தும் திரும்ப, திரும்ப உள்ளே வருகிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு குப்பை தொட்டியில் போடும் மீதமுள்ள உணவு பொருட்களை தின்று பழகிவிட்டதால் திரும்ப, திரும்ப வருகிறது. இதை பிடித்து செல்லும்படி மாநகராட்சியில் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பயணிகளை நாய்கள் கடித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்து இருக்காமல் உடனடியாக ரெயில் நிலையத்திற்குள் பயணிகளை பீதியடைய செய்யும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நுழையு வாயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார்களாவது உள்ளே நுழையும் நாய்களை தடுத்து விரட்ட வேண்டும் எனவும் பயணிகள் கோரியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து புகார் வரும் போதெல்லாம் நாய்களை பிடித்து வருகிறோம். ஆனாலும் நாய்கள் மீண்டும், மீண்டும் அங்கு செல்கிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு போடும் மிச்ச உணவுக்காகவும், அங்கு நடத்தப்படும் சில ஓட்டல்களில் இருந்து தொட்டியில் போடப்படும் சிக்கன் கழிவுகளுக்காகவும் அதன் வாசனையை நுகர்ந்து எங்கிருந்தாலும் வந்து விடுகிறது. எனவே ரெயில் நிலையத்திற்குள் உணவுப்பொருள் கழிவுகள் போடபயன்படுத்தப்படும் தொட்டிகளை வெளியே வைத்தால் நாய்கள் நுழைவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றார்.
பயணிகள் நலன் கருதி ரெயில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து வெறிநாய்களை விரட்டியடித்து பயணிகளை பீதியில் இருந்து காக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment