Saturday, September 13, 2014
மதுரை ரெயில் நிலையம் தென் தமிழ்நாட்டில் மிக பெரிய ரெயில் நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலை காண வெளி மாநிலத்தவர்கள் மட்டும் அல்லாமல் வெளி நாட்டினரும் ரெயில் மூலம் மதுரை வருகிறார்கள்.
இப்படி பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளோடு பயணிகளாக நாய்கள் சுற்றி திரிவதும், பயணிகள் தங்கும் இடத்திலேயே சுதந்திரமாக படுத்து தூங்குவதுமாக இருக்கிறது.
கிழக்கு நுழைவு வாயில் வழியாக அவசர அவசரமாக செல்லும்போது நாய்கள் மீது பயணிகள் மிதித்து விட்டால் கடிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகள் குழந்தைகளுடன் ஓய்வு எடுக்கும் இடத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிவதால் எப்போது யாரை கடிக்கும் என்ற அச்சநிலை பயணிகளிடையே நிலவி வருகிறது.
ரெயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கும் நிலையில் இந்நாய்களை மட்டும் எப்படி உள்ளே அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது குறித்து பயணிகள் ரெயில் நிர்வாகத்தில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ரெயில் நிலையத்திற்குள் நுழையும் நாய்களை எங்கள் ஊழியர்கள் விரட்டியடித்தும் திரும்ப, திரும்ப உள்ளே வருகிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு குப்பை தொட்டியில் போடும் மீதமுள்ள உணவு பொருட்களை தின்று பழகிவிட்டதால் திரும்ப, திரும்ப வருகிறது. இதை பிடித்து செல்லும்படி மாநகராட்சியில் தெரிவித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
பயணிகளை நாய்கள் கடித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்து இருக்காமல் உடனடியாக ரெயில் நிலையத்திற்குள் பயணிகளை பீதியடைய செய்யும் வெறிநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நுழையு வாயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார்களாவது உள்ளே நுழையும் நாய்களை தடுத்து விரட்ட வேண்டும் எனவும் பயணிகள் கோரியுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து புகார் வரும் போதெல்லாம் நாய்களை பிடித்து வருகிறோம். ஆனாலும் நாய்கள் மீண்டும், மீண்டும் அங்கு செல்கிறது. காரணம் பயணிகள் சாப்பிட்டு விட்டு போடும் மிச்ச உணவுக்காகவும், அங்கு நடத்தப்படும் சில ஓட்டல்களில் இருந்து தொட்டியில் போடப்படும் சிக்கன் கழிவுகளுக்காகவும் அதன் வாசனையை நுகர்ந்து எங்கிருந்தாலும் வந்து விடுகிறது. எனவே ரெயில் நிலையத்திற்குள் உணவுப்பொருள் கழிவுகள் போடபயன்படுத்தப்படும் தொட்டிகளை வெளியே வைத்தால் நாய்கள் நுழைவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்றார்.
பயணிகள் நலன் கருதி ரெயில் நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து வெறிநாய்களை விரட்டியடித்து பயணிகளை பீதியில் இருந்து காக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
0 comments:
Post a Comment