Saturday, September 13, 2014
அனுப்பர்பாளையம், :திருப்பூர் சாய கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்கிற சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடை காற்றால் பாதிக்கப்படுவதாக போயம்பாளையம் கங்கா நகர் பொதுமக்கள் நேற்று தங்களின் வீடுகள் மற்றும் வீதிகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
திருப்பூரில் பின்ன லாடை துணிகளுக்கு சாயமி டும் சாயப்பட்டறைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சாய கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்து, மீண்டும் அந்த தண்ணீரையே பயன்படுத்தும் நவீன தொழில் நுட்பத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நான்கு சாயப்பட்டறைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேறும் சாய கழிவுநீர் குழாய்கள் மூலமாக கொண் டு செல்லப்பட்டு, கங்கா நகர் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடை காற்றால் சுற்றுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வருவதாக கங்கா நகர் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து தரப்பினரும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கங்கா நகர் பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகள், வீதிகளில் கறுப்புக் கொடியேற்றி, திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கங்கா நகர் சுத்தகரிப்பு நிலைய பராமரிப்பாளர்களை அழைத்து இன்று (13ம் தேதி) இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
திருப்பூரில் பின்ன லாடை துணிகளுக்கு சாயமி டும் சாயப்பட்டறைகள், பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து, சாய கழிவுநீரை பூஜ்ய சதவீத சுத்திகரிப்பு செய்து, மீண்டும் அந்த தண்ணீரையே பயன்படுத்தும் நவீன தொழில் நுட்பத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. நான்கு சாயப்பட்டறைகள் இணைந்து இந்த சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேறும் சாய கழிவுநீர் குழாய்கள் மூலமாக கொண் டு செல்லப்பட்டு, கங்கா நகர் சுத்தகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயன வாடை காற்றால் சுற்றுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு வருவதாக கங்கா நகர் பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைத்து தரப்பினரும் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி கங்கா நகர் பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகள், வீதிகளில் கறுப்புக் கொடியேற்றி, திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கங்கா நகர் சுத்தகரிப்பு நிலைய பராமரிப்பாளர்களை அழைத்து இன்று (13ம் தேதி) இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment