Monday, September 22, 2014
வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் அமைய உள்ள அம்மா உணவகத்தை, காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அம்மா உணவகத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இப்பணிகளை காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் கே.சரவணன் கூறுகையில், நவீன நீராவி அடுப்பு, அரிசி, பருப்பு மற்றும் ஒரே சமயத்தில் 240 இட்லிகளை வேகவைக்கும் சாதனம், சமையல் பாத்திரங்களைக் கழுவி கிருமி நீக்கும் இயந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு, குடிநீர் குளிர்விக்கும் கருவி, 12 உணவருந்தும் டேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் இந்த உணவகம் செயல்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் விரைவில் இந்த உணவகத்தை திறந்து வைக்க உள்ளார் என்றார்.
ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி, நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கட்டட சங்கத் தலைவர் ஆர்.மணி, துணைத் தலைவர் யு.ஏ.சரவணன், கவுன்சிலர் வைகை கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
.jpg)
0 comments:
Post a Comment