Monday, October 20, 2014
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் சமுதாயப் பணியாற்றி வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு தபேலா இசைக் கலைஞர் ஆறுமுக நாயனார், பார்க் விரிவாக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மங்கயர்க்கரசி, ஆன்மிக பணியாற்றி வரும் ஆர்.வி.எஸ்.ஆறுமுகம், விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆர்.பிரபாகரன் ஆகிய 4 பேருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது .
இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மண்டலச் செயலர் மார்ட்டின், மாவட்ட உதவி ஆளுநர் டாக்டர் பிரிசில்லா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். பட்டுக்கோட்டை பாஸ்கர் சிறப்புரையாற்றினார். உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க ஆலோசகர் டாக்டர் எஸ்.சுந்தரராஜன் வாழ்த்துரை வழங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் நன்றி கூறினர். சக்கரபாணி, ஆனந்த், சரவணகுமார், குமரன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...

0 comments:
Post a Comment