Thursday, October 02, 2014
உடுமலை ஒட்டுக்குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன.
உடுமலையில் ஏழுகுளம் பாசன பகுதிகள் என்று அழைக்கப்படும் குளங்களுக்கு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தளிவாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டுவரப் பட்டு பாசன பகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஏழு குளம் பகுதியின், கடைசி குளம் ஒட்டுக் குளம். இந்த ஒட்டுக் குளம் 10.150 சதுர கிலோமீட்டர் பரப்பளவு (நீர்பிடிப்பு பகுதி) கொண்டது. இந்த ஒட்டுக்குளத்தின் மூலம் சுண்டக்காம்பாளையம், வடபூதனம் ஆகிய கிராமங்களில் பாசன வசதி பெறக்கூடிய நிலப் பரப்பு சுமார் 430 ஏக்கர் உள்ளது.
இந்த ஒட்டுக்குளத்தில் நீர் தேங்கும் பரப்பில், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப் பிற்கு சொந்தமான ஏரியின் ஒரு பகுதியில் 5 ஏக்கர் 63 சென்ட் நிலப்பரப்பை 11 பேர் ஆக்கி ரமித்து நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.அங்கு 42 இளம் தென்னைமரங்களும் உள்ளன. கரும்பு பயிர் மகசூல் எடுக்கப்படும் தற்போது கட்டை கரும்பு துளிர் விட்ட நிலையில் உள்ளது.
ஒட்டுக்குளத்தில் தனியார்களின் ஆக்கிரமிப்பினால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பொதுப்பணித்துறையை கேட்டுக்கொண்டார்.அத்துடன் சென்னை கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு பொதுப் பணித்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றறப்படாமல் இருந்தது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவும் மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு சென்னை கோர்ட் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உடுமலை ஆர்.டி.ஓ.குணசேகரன், தாசில்தார் எஸ்.சைபுதீன், நிலவருவாய் ஆய்வாளர் ராமலிங்கம். பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் செல்லமுத்து, இளம்பொறியாளர் சரவணன், தலைமை நில அளவர் தர்மலிங்கம், ஆகியோர் நேற்று ஒட்டுக்குளம் சென்றனர். பாதுகாப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியலிங்கம், அன்பரசு, அனந்தநாயகி ஆகியோர் தலைமையில் 50 போலீசாருடன் சென்றிருந்தனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் முன்னிலையில் ஜே.சி.பி. மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடம் பொதுப்பணித்துறைக்கு கையகப்படுத்தப்பட்டன.இந்த நடவடிக் கைகள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி 2007–ம் ஆண்டு தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment