Wednesday, November 12, 2014

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (12–ந்தேதி) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தொழிற்சங்க தலைவர்கள் நவரத்தின பாண்டி, ராஜாராம், ராமநாதன் ஆகியோர் இன்று கூட்டாக மதுரையில் நிருபர்களிடம் ,
ஊதிய உயர்வு சம்பந்தமாக நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல வருடங்களாக போராடி வருகிறோம். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியில் முடிந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் 11 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஊழியர்களின் பற்றாக்குறை, புதிய கிளைகள் தொடக்கம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வங்கி ஊழியர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 12–ந்தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளோம்.இதேபோல் அடுத்த மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் மண்டல அளவில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.மதுரையில் 500–க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இதில் வேலை பார்க்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். கோரிக்கையை வலியுறுத்தி நாளை (11–ந்தேதி) தல்லாகுளத்தில் வங்கி ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மேலும் 12–ந்தேதி மதுரை ரெயில் நிலையம் எதிரே வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment