Wednesday, November 26, 2014
உடுமலை நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாலப்பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையில், பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி ரெயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் மேம்பாலப்பணிகள் முடிவடையாத சூழ்நிலை ஏற்படுமானால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தது இருந்தனர்..
ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனையின் பேரில் மேம்பால பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அண்ணா தி.மு.க. நகர\ செயலாளர் கே.ஜி.சண்முகம், வழக்கறிஞர் கண்ணன், கவுன்சிலர் கண்ணன், தொகுதிச் செயலாளர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றியக்குழுதலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...

0 comments:
Post a Comment