Monday, December 22, 2014
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்கானபதிவு செய்யும் சிறப்பு முகாமை திருப்பூரில் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் {ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல் எரிவாயு விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பல வழிகளிலும் இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் இதற்காக அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், தங்கள் வருவாயை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் பாரத் எரிவாயு நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்துக்குப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருப்பூரில் நடைபெற்றது. இம்முகாமை, வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் துணை மேயர் சு.குணசேகரன் ஏற்பாடு செய்து, தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சமையல் எரிவாயு விநியோக மையத்தின் ஊழியர்கள் நேரடியாக பங்கேற்று மானியத் திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, ஒரேநாளில் 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மானியத் திட்டத்துக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வாலிபாளையம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 23) நடைபெற இருப்பதாக துணை மேயர் குணசேகரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment