Monday, December 22, 2014
திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மண்ணரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(53). இவர், என்.ஆர்.கே. புரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிறுவனத்தின் ஜன்னல் வழியாகப் புகை மூட்டம் வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகத்
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment