Tuesday, December 30, 2014
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்ணிமா(வயது 45) என்பவர் தனது தாயாருடன் மனு கொடுக்க வந்திருந்தார். திடீரென்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இது பற்றி பூர்ணிமா கூறுகையில், எனது கணவர் சந்திரசேகர். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவருக்கு பெண் குழந்தை பிடிக்காது. அதனால் என்னையும், எனது 2 குழந்தைகளையும் கொடுமை செய்தார். அவரிடம் இருந்து தப்பி வந்து திருப்பூரில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வந்த பிறகும் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மிரட்டல் வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
மனு கொடுக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கேட்டதும், மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் பூர்ணிமா தொடர்ந்து அதிகாரிகளிடம் சமாதானம் அடையாமலும், மனு கொடுக்காமலும் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் வேன் வரவழைக்கப்பட்டு பூர்ணிமாவை வேனில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment