Wednesday, December 17, 2014
மதுரை மாநகராட்சியை சுத்தப்படுத்தும் வகையில் அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட கோர்ட்டில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வக்கீல் சங்கத்தினர் மாநகராட்சியிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி வக்கீல் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இன்று அழகிய மதுரை மாநகர் (அம்மா) திட்டம் மூலம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மேயர் ராஜன்செல்லப்பா, மாவட்ட நீதிபதிகள் சின்னராஜ், கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சுமார் 100–க்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் கோர்ட்டு முழுவதும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். பொக்லைன், புல்டோசர் எந்திரம் மூலம் கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து மேயர் ராஜன் செல்லப்பா கூறுகையில், வக்கீல் சங்கத்தினர் கேட்டுக் கொண்டதன்பேரில் இன்று கோர்ட்டு வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாதத்திற்கு ஒருமுறை இங்கு துப்புரவு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் பழனிச்சாமி, நகர் நல அலுவலர் யசோதா மணி, வக்கீல் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ராமசாமி, நெடுஞ்செழியன், அரசு வக்கீல்கள் ரமேஷ், தமிழ்செல்வம், கண்ணன், சேதுராமன், பாலசுப்பிரமணி மற்றும் வக்கீல்கள் ஜெயக்குமார், அசோகன், ரமணி, மக்கள் செய்தி தொடர்பாளர் சித்திரைவேல், ஜெயலலிதா பேரவை நிர்வாகி நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
0 comments:
Post a Comment