Tuesday, December 23, 2014
ஊத்துக்குளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளராக கே.காமராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், பி.ராஜூ, சி.சுப்பிரமணியம், என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.மதுசூதனன், சி.மூர்த்தி, எஸ்.முத்துக்கண்ணன், பி.முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி ஆகிய 13 பேர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முன்னதாக மூன்றாம் நாளான செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் விவாதத்திற்கு கே.காமராஜ் தொகுப்புரை ஆற்றினார். மாநில மாநாட்டிற்கு 4 பெண்கள் உள்பட 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதிகள் மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.
மாபெரும் பேரணி
மாநாட்டின் நிறைவில் ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் அருகில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். விஜயமங்கலம் சாலை வழியாக ஊத்துக்குளி டவுன் தோழர் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் ஒன்றியக்குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். தமுஎகச மக்கள் கலைக்குழு, அவிநாசி திடுமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.கே.கொளந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
-
நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது53).இதே ஊரைச்சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (42).சக்திவேல்(43).ராஜ்குமார் (22) ஓரே ஊர...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...

0 comments:
Post a Comment