Tuesday, January 20, 2015
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் 1930) உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டாஸ்மாக் மதுக் கடையால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த மதுக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்திரா, ஜனவரி 17-ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த கடை அப்புறப்படுத்தப்படவில்லை. திங்கள்கிழமை வழக்கம்போல் அந்த கடை திறக்கப்பட்டது.
உடனடியாக, அப்பகுதி பொதுமக்களுடன் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மதுக்கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கடை மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சாவித்திரி, தலைவர் அங்குலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்ளிட்டோர் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரிடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுத்தனர்.
மதுக்கடையை இடம் மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...

0 comments:
Post a Comment