Tuesday, January 20, 2015
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் 1930) உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டாஸ்மாக் மதுக் கடையால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த மதுக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்திரா, ஜனவரி 17-ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த கடை அப்புறப்படுத்தப்படவில்லை. திங்கள்கிழமை வழக்கம்போல் அந்த கடை திறக்கப்பட்டது.
உடனடியாக, அப்பகுதி பொதுமக்களுடன் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மதுக்கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கடை மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சாவித்திரி, தலைவர் அங்குலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்ளிட்டோர் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரிடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுத்தனர்.
மதுக்கடையை இடம் மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment