Monday, December 29, 2014
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் -1930) அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாவித்திரி, 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் செல்வி, தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட 50 பெண்கள், வாலிபர் சங்கம் சார்பில் 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் முருகேஷ், 15வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகர காவல் துணை
ஆணையர் திருநாவுக்கரசு, சமரசப் பேச்சு நடத்தினார். டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்ரா, இன்னும் 20 நாள்களில் இந்த டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து அகற்றுவதாக உறுதி அளித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...

0 comments:
Post a Comment