Friday, January 23, 2015
ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அவ்வப்போது திடீர் ஆய்வுகள்
நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு
கூட்டுறவு ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது ஒரு சில ரேசன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பதும், பொருட்களை போலி ரசீது மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சில கடைகளில் விற்பனைத் தொகையை கருவூலத்திற்கு செலுத்தாமலும், இருப்புத் தொகையில் குறைவு ஏற்படுத்தி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதுபோன்ற முறைகேடுகளில் தேங்கல்பட்டி, மதிப்பனூர், மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம்–1, பொன்னிநகர்–1 ஆகிய 5 கடைகளின் விற்பனையாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 5 கடைகளின் விற்பனையாளர்களையும் உடனடியாக பணிஇடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் உத்தரவிட்டார். முறைகேடுகளில் ஈடுபட்ட விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 652 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறும்போது இது போன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு முறைகேடுகளில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment