Wednesday, February 04, 2015
இன்றைய நம் இளைய தலைமுறையினர் நமது வளமான பண்பாட்டு வேர்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். இதுதான் நாம் சந்திக்கும் மிகக் கடுமையான சவால் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார்.
12வது திருப்பூர் புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில், தேசம் போகும் பாதை புதிது..ஆனால்? என்ற தலைப்பில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது: இளைஞர்கள், பெண்களின் மூலம்தான் மாற்றங்கள் நிகழ முடியும். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாக பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த எண்ணங்களும் இல்லை. வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடிய கூட்டமாக அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். பொதுக்கூட்டம், அறிவுத்தள விவாதம், அரசியல் தளத்தில் பேசுவதைக் கேட்பதற்கு இன்று காதுகள் இல்லை.
நாட்டின் பொருளாதாரக் கொள்கை, கல்விக் கொள்கையை வகுப்பவர்கள்தான் இதற்குக் காரணம். நம் கல்வி அமைப்பு திறனற்ற தொழிலாளர்களை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இளைஞர்களின் கற்பனைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வெற்றுத் தகவல்அறிவு பெறுவதால் என்ன பயன்? அதை இன்று கணினியிலேயே தேடிக் கொள்ளலாம். ஆனால் கற்பனை வளம் இல்லாத மனிதன் ஆரோக்கியமாக வளர முடியாது.
வேலையில் இருப்போரும், வேலை இல்லாதவர்களும் என இருதரப்பினருமே பாதுகாப்பற்றவர்களாக உணரும் நிலை தற்போது உள்ளது. வாசிப்பு, பண்பாட்டில் இருந்து இளைய தலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் இளைஞர் கூட்டத்தை ஏடிஎம் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரமாக மாற்றிவிட்டோம். ஒரு தேசமே மாபெரும் பைத்தியக்காரர்கள் விடுதியாக இருக்க முடியுமா? பண்பாட்டு மரபில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டத்தை எளிதில் வெறுப்பை நோக்கி திருப்ப முடியும். அதைத்தான் இன்றைய அரசியல் சூழலில் செய்து கொண்டிருக்கின்றனர். இது அவநம்பிக்கை கொள்வதற்கான விசயம் அல்ல. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியோடு போராட வேண்டும். இந்த விசயத்தை மாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு மனுஷ்யபுத்திரன் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment