Thursday, February 05, 2015
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச்சட்டம் 2014 நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு மாநிலத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி, மதுசூதனன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
அதைதொடர்ந்து விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் இருந்த சட்ட நகல்களை பறித்தனர். உடனே விவசாயிகள் சட்டநகல்களை கிழித்து எறிந்தனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
திருச்சி மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம்...

0 comments:
Post a Comment