Monday, March 23, 2015
திருப்பூரில் குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் அழகர்சாமி (34). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர்களின் மகள் நிவேதாஸ்ரீ (4). இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதலே பாண்டீஸ்வரின் நடத்தையில் அழகர்சாமி சந்தேகித்து வந்துள்ளார். இதனால் அவரை நீண்ட நாள்களாக கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில், கணவனின் கொடுமையை தாங்க முடியாத பாண்டீஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தனது மகள் நிவேதாஸ்ரீயை வீட்டில் உள்ள கூரையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுடன், பின்னர் பாண்டீஸ்வரியும் அதே கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் 20.6.2010-ம் தேதி நடந்தது. இதுகுறித்து பாண்டீஸ்வரின் தந்தை செல்வராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்சாமியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி வசந்தலீலா விசாரித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
.jpg)
0 comments:
Post a Comment