Monday, March 16, 2015
காங்கயம் அருகே, நெய்க்காரன்பாளையத்தில் கடந்த 9-ஆம் தேதி விவசாயி வீட்டில்
30 பவுன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கம் திருடுபோனது தொடர்பான வழக்கில், 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை போலீஸார் மீட்டனர்.
காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையதைச் சேர்ந்தவர் சாமியப்பகவுண்டர் (72), விவசாயி. இவருடைய மனைவி சாமியாத்தாள் (72). கடந்த 9-ஆம் தேதி இந்த தம்பதி தோட்டத்துக்கு சென்றிருந்த சமயத்தில், மர்ம நபர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.1.50 ரொக்கம், 30 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 3 பேரை ஞாயிற்றுக்கிழமை காங்கயம் போலீஸார் கைது செய்தனர். இதில், திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு அருகே
குடியிருக்கும் பிரகாஷ்( 25) என்பவர் தான் இதற்கு திட்டமிட்டுத் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அவருடைய நண்பர்களான திருச்சி, தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் (19), தொட்டியம் அருகே கொசவன்பட்டிப் பகுதியைச் சேர்ந்த சேகர் (40) ஆகிய இருவரும் பிரகாஷுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 40 பவுன் நகைகள், ரூ.1.35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ராமன், ஏற்கனவே தொட்டியம் பகுதியில் 5 திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சிறை தண்டனை பெற்ற பழைய குற்றவாளி என விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கயம் அருகே, சிவன்மலை - கல்லேரி கிராமச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சென்னிமலை பசுபவபட்டியை சேர்ந்த தம்பதியை வழிமறித்து 6 பவுன் சங்கிலியை சேகரும், பிரகாஷும் பறித்துச் சென்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment