Monday, March 16, 2015
பிரசவத்தில் குழந்தை இறந்ததையடுத்து அரசு மருத்துவமனையை உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் அரவைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தேவி, கடந்த 12-ஆம் தேதி பிரசவத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சனிக்கிழமை காலை தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்துக்குப் பின், குழந்தை இறந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர், அவர்கள் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய 15 வேலம்பாளையம் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையின் உடலை கையில் வைத்திருந்த உறவினர்களில் ஒருவரான பியூலா என்பவர் திடீரென குழந்தையின் உடலில் அசைவு ஏற்பட்டதாகவும், குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை எடுத்துக்கொண்டு, மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்தே தான் பிறந்ததாக தெரிவித்தனர். ஆனால், பிறந்தபோது குழந்தைக்கு உயிர் இருந்தது எனவும், மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் குழந்தை இறந்தது என புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவர்களின் சமரசத்தையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், குறைபிரசவம் காரணமாக குழந்தை இறந்தேதான் பிறந்தது. அவர்கள் கூறுவதுபோல் நடக்க வாய்ப்பில்லை என்றனர். இச்சம்பவம் காரணமாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment