Monday, March 23, 2015
திருப்பூர் அருகே பள்ளி மாணவரைக் கடத்தி ரூ. 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (32). இவரது மனைவி சல்மா ஷாரீஃப். இவர்களது மகன் முகமதுஇம்ரான் (10). அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், சனிக்கிழமை மாலை தனது நண்பர் இசாக் (15), அவரது நண்பர்கள் ஷாருகான், முஸ்தாக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியிலுள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், தாங்களும் குளிக்கத்தான் செல்கிறோம் என்று கூறி, முகமது இம்ரான், இசாக் ஆகியோரை தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனராம்.
தொடர்ந்து, இசாக்கை பி.ஏ.பி. வாய்க்கால் அருகே இறக்கி விட்டு,விட்டு முகமது இம்ரானை மிரட்டி கூலிப்பாளையம் நான்கு சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து முகமது இம்ரானை மிரட்டி அடித்ததாகத் தெரிகிறது.
மேலும், முகமதுஇம்ரான் பெற்றோரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் தங்கள் மகனை விடுவதாகக் கூறினார்களாம்.
இதனால் அச்சமடைந்த முகமதுஇம்ரானின் பெற்றோர், ரூ. 5 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததையடுத்து, பணத்துடன் கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு வருமாறு அந்த நபர்கள் தெரிவித்தனராம். தொடர்ந்து, பணத்தை எடுத்துக்கொண்டு சல்மாஷாரீஃப், கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு மறைந்து நின்ற இருநபர்கள் ரூ. 5 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு முகமதுஇம்ரானை விடுவித்து விட்டதாக தெரிகிறது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து முகமதுஇம்ரானின் பெற்றோர் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கடத்தி பணம் பறித்த நபர்களை தேடி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment