Friday, April 17, 2015
தாராபுரத்தில் கடன் தவணையை முறையாகச் செலுத்தாதவரின் காரை பறிமுதல் செய்த நிதி நிறுவன அதிபர் உள்ளிட்ட 2 பேர் மீது காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம், புதுமஜீத் தெருவைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (46). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான காரின் பேரில், தனது நண்பர் ராஜா என்பவர் உதவியுடன், பொள்ளாச்சி சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் சதாசிவத்திடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றிருந்தார்.
கடந்த சில மாதங்களாக கடன் தொகைக்கான மாதத் தவணையை ஹைதர் அலி முறையாகச் செலுத்தவில்லை. ஹைதர் அலி தனது காரை கருணாகரன் என்பருக்குச் சொந்தமான பழுது நீக்கும் பணிமனையில் நிறுத்தி இருந்தார்.
ஹைதர் அலி புதன்கிழமை பணிமனைக்குச் சென்று பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அதுகுறித்து கருணாகரனிடம் கேட்டபோது, ராஜாவின் உதவியுடன் நிதி நிறுவன அதிபர் சதாசிவம் காரை எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து, தாராபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராமஜெயத்திடம் ஹைதர் அலி புகார் மனு அளித்தார். நீதித் துறை நடுவர் உத்தரவின் பேரில், தாராபுரம் காவல் துறையினர் நிதி நிறுவன அதிபர் சதாசிவம், ராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment