Wednesday, April 01, 2015
உடுமலையை அடுத்துள்ள தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்தை இடம் மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தளி பேருராட்சித் தலைவர் தெய்வநாயகியிடம், பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
கடந்த 1964-ஆம் ஆண்டு தளி பேரூராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் தொடங்கப்பட்டது. தற்போது முழு நேரமாக செயல்பட்டு வரும் இந்த நூலகத்தில் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உள்ள நூலகக் கட்டடம், பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வந்து செல்ல முடியாத இடத்திலும், போதிய வெளிச்சம் இன்றியும் அமைந்துள்ளது.
மேலும், நூலகர் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் பெரும்பாலான நாள்களில் நூலகம் முடியே கிடக்கிறது. நூலகக் கட்டடம் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருப்பதால் தவறான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில், தளி பிரதான சாலையில் இருந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு அந்த இடம் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்த இடத்தில் நூலகத்திற்கென புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment