Thursday, July 16, 2015
விருதுநகரில் காமராஜரின் 113-ஆவது பிறந்த நாள் விழாவை
முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர்
வே.ராஜாராமன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விருதுநகரில், முன்னாள் முதல்வரான காமராஜரின்
113-ஆவது பிறந்த நாள் விழாவை கல்வித் திருவிழாவாக பொதுமக்கள் கொண்டாடி
வருகின்றனர். அதன் அடிப்படையில் காலை முதலே வாகனங்களில் வந்து காமராஜர்
இல்லத்திற்கு சென்று புத்தகம், நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி மரியாதை
செய்தனர்.
அரசு சார்பில் நடந்த விழாவில், மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபம், நினைவு இல்லம் மற்றும்
கச்சேரி சாலையில் உள்ள மணிமண்டபத்திற்கு சென்று அவரது உருவச் சிலைக்கு
ஆட்சியர் வே.ராஜாராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில்,
சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், நகராட்சி தலைவர் மா.சாந்தி,
ஆணையாளர் முஜிபூர்ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர்
கரிகோல்ராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வேலாயுதம், த.மா.காவின்
வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்
நீதிபதி ஜோதிமணி, முன்னாள் காவல் துறை தலைவர் ஜான் நிக்கல்சன், காமராஜரின்
தங்கை பேரன் கனகவேல், மதிமுக சார்பில் நகர செயலாளர் ராமர், தேமுதிக
சார்பில் வைரமுனி உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று மரியாதை
செய்தனர்.
இதையொட்டி நினைவு இல்லம், ஆட்சியர் அலுவலக வளாக
மண்டபம், கச்சேரி சாலை மணிமண்டபம், பெரியவள்ளிக்குளம் மணிமண்டபம் ஆகியவை
வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment