Monday, August 17, 2015
சிவகாசியில் அரசு சார்பில் நடந்த விழாவில் 3131 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை அமைச்சர் வழங்கினார்.
சிவகாசி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில்
விலையில்லா பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்ட
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது: ஏழை மக்கள்
பயனடையும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
வருகிறார்.
அதன் அடிப்படையில் 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு
விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சிறப்புத் திட்டத்தின்
மூலம் கடந்த மூன்றாண்டுகளில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவை
வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 4,5ஆம் கட்டமாக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு
வருகிறது. இவ்விழாவில் 3131 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர்
டி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்தா, மாவட்ட ஊராட்சி
துணைத்தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
சி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுடர்வள்ளி,
சிவகாசி நகராட்சித் தலைவர் கதிரவன், துணைத் தலைவர் அசன்பக்ருதின், மாவட்ட
ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment