Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 320 நபர்களுக்கு திருமணம், கல்வி விபத்து இறப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஒய்வூதியம் போன்ற திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள உழவர் பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் உழவர் பாதுகாப்புத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் திருமணம், கல்வி போன்ற திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்து மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளார்கள். அரசின் நலத்திட்டங்களை பெறுகின்ற மக்கள் என்றும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
இவ்விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.முருகையா,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திரு.மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செழியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment