Monday, October 12, 2015
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் 320 நபர்களுக்கு திருமணம், கல்வி விபத்து இறப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் ஒய்வூதியம் போன்ற திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள உழவர் பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் உழவர் பாதுகாப்புத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் திருமணம், கல்வி போன்ற திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்து மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளார்கள். அரசின் நலத்திட்டங்களை பெறுகின்ற மக்கள் என்றும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
இவ்விழாவில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா.அந்தோணி கிரேஸ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.முருகையா,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் திரு.மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செழியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment