Monday, December 28, 2015
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக 2013–ம் ஆண்டு பட்டமுத்து, சண்முகம் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக மணிகண்டன் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் சுரேஷ் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பட்டமுத்துவின் சகோதரர்கள் சுடலைமுத்து, ரமேஷ், சண்முகத்தின் மகன்கள் அழகு கிருஷ்ணன், வீரபாகு, மற்றொரு முருகன், ஆச்சிமுத்து மற்றும் பலர் மணிகண்டன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்வாய் பஞ்சாயத்து தலைவி ராஜவடிவின் கணவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆச்சிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சுரேஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மணிகண்டனின் சகோதரர்கள் அய்யப்பன் (43), சுடலைமுத்து (35), முத்துராமன் (31) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பிலும் பலரை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்க...
0 comments:
Post a Comment