Wednesday, December 09, 2015
தூத்துக்குடியில் பள்ளியில் பாடம் எடுக்காமல் அடிக்கடி செல்போனில் பேசிய ஆசிரியையைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி, மாநகராட்சிக்கு உட்பட அத்திமரப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கூட்டாம்புளியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். மேலும் 3 ஆசிரியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா என்பவர் 6, 7, 8 ஆகிய மாணவ, மாணவியர்களுக்கு வகுப்பு ஆங்கில பாடம் எடுத்து வந்தார்.
இவர் கடந்த 2013 ஏப்ரல் மாதம் முதல் இப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். ஆனால், பணியில் சேர்ந்த நாள் முதல் அடிக்கடி விடுப்பு எடுப்பாராம். கடந்த 2 ஆண்டுகளில் 500 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வரவில்லையாம். பள்ளிக்கு வந்தாலும் பாடம் எடுக்காமல், செல்போனில் பேசிக்கொண்டே இருப்பாராம். இதனால் கடந்த காலாண்டு தேர்வில் ஆங்கில பாடத்தில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெயிலாகி விட்டனராம்.
இதையடுத்து அந்த ஆசிரியையை மாற்ற வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த ஆசிரையை ரத்னா, மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தாராம். இதனால் மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சமாதானப்படுத்தினார்.
மேலும், நேற்று மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் தொடக்க கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக பாஜகவில் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகரும் முன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கிண்ணிமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கி.மீனாட்சிபட்டி, வடபழஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான...
-
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறை...
-
தூத்துக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் வந்த கொலை வழக்கு பிரபல ரவுடி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 4 கார்கள் பறிமுதல் செ...
-
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது ச...
-
திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் 75ஆவது சுதந்திர தின விழா உதவி ஆணையர் செல்வ பாலாஜி தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது திருச்சி 75 சுதந...
-
*இன்டேன் LPG நுகர்வோரின் கவனத்திற்கு* *இன்டேன் LPG சிலிண்டரானது டெலிவரிக்கு முந்தைய பரிசோதனைகளான தரம் மற்றும் எடை பரிசோதனை உறுதி செ...
0 comments:
Post a Comment