Monday, February 01, 2016
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்பாளரும், மாவட்ட செயலாளருமான சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜான்ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகிகள் ஜெயராஜ், பாக்கிய ரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சரத்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வருகிற தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அதிலும் தென்காசி தொகுதிக்குதான் அதிக வாய்ப்பு உள்ளது.
எந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கட்சி தொண்டர்களின் விருப்பத்தை பரிசீலித்து வருகிறேன். எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்காக வருத்தப்படவில்லை.
இவர்கள் வெளியேறியதால் எங்களது கட்சிக்கு பலம் அதிகரித்துள்ளது. பலவீனம் ஏற்படவில்லை. வருகிற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து சென்னையில் வருகிற 7–ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்.
தற்போது நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருந்து வருகிறோம். அ.தி.மு.க.வை நான் விமர்சித்ததாக கட்சியை விட்டு வெளியேறியவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தமிழகத்தில் தற்போது அனைத்து கட்சியினரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். ஏன் நாங்கள் முதல்வராக கூடாது. எங்களுக்கும் அந்த ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment