Thursday, September 08, 2016
திருப்பூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் திருப்பூர் ஸ்ரீநகரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் பிரிவு ஸ்ரீநக ர் கிளை சார்பில் விநாயகர் சிலை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் மாநில இணை அமைப்பாளர் காசி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாநகர தலைவர் திருச்செல்வம், பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பூர் ஸ்ரீநகர் ஜமாத் கமிட்டியின் தலைவர் நாதர்ஷா அலி மற்றும் நிர்வாகிகள் அரோமா நவ்ஷாத், ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பா.ஜனதா தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகன், தி.மு.க. 29–வது வார்டு பொறுப்பாளர் மதிவாணன், ஐ.ஜே.கே. மாவட்ட செயலாளர் மனோகரன், பஜ்ரங்தள் அமைப்பு ஸ்ரீநகர் கிளை நிர்வாகிகள் காசி, கணேஷ், குமார், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூரில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கொடி அசைத்து வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment