Thursday, September 08, 2016
மருமகளிடம் இருந்து மகனை பிரித்து வைத்த குற்றத்துக்காக பெண்ணுக்கு 5 நாள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.பனியன் நிறுவன தொழிலாளி
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் மூர்த்தி நகரை சேர்ந்தவர் நஞ்சம்மாள்(வயது 55). இவருடைய மகன் விஜயகுமார்(31). பனியன் நிறுவன தொழிலாளி. விஜயகுமாரும், திருநீலகண்டபுரம் எஸ்.வி.காலனியை சேர்ந்த ரெமிதாவும்(29) காதலித்து கடந்த 21–9–2011 அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் 2 மாதம் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.ஆனால் நஞ்சம்மாள், தனது மருமகளான ரெமிதாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 23–12–2012 அன்று வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற விஜயகுமார் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் விஜயகுமார் தனது செல்போனில் இருந்து ரெமிதாவுக்கு குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்.) அனுப்பினார். அதில் ரெமிதாவை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.5 நாள் சிறை தண்டனை
இதைத்தொடர்ந்து ரெமிதா திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், இதற்கு காரணமான தனது மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார், நஞ்சம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு செல்லத்துரை, பெண்ணுக்கு கொடுமை செய்த குற்றத்துக்காக நஞ்சம்மாளுக்கு 5 நாள் கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment