Monday, October 24, 2016
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை
உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை
இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment