Monday, February 10, 2020
உரிய சொத்து பங்கீடு வழங்க காவல்நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி.
திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,
இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி துவாக்குடி தெற்குமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சேலம் உருக்காலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி சேலம் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மணிகண்டனின் தந்தை காமராஜ் தனது தாய் ராணியுடன் செய்துக்கொண்ட முதல் திருமணத்தை மறைத்து, லலிதா என்ற பெண்ணை 2ம் தாரமாக திருமணம் செய்து கொண்டு, தற்போது லலிதாவிற்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூத்த தாரத்தின் மகனான மணிகண்டனுக்கும், அவரது தாயாருக்கும் வழங்கவேண்டிய உரிய பங்கு வழங்காததாலும், இதற்கு முட்டுக்கட்டையாக இரண்டாம் மனைவி லலிதா மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், எனவே தங்களுக்கான உரிய பங்கு தொகையை பெற்றுத் தரக்கோரி திருவெறும்பூர் காவல் நிலையத்திலும், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கண்துடைப்புக்காக விசாரணையை மட்டும் நடத்திவிட்டு அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாத நிலையில், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்,
இன்றைய தினம் மணிகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி மணிகண்டனை காப்பாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
பொது மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் தீக்குளிப்பு முயற்சி செய்த மணிகண்டனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கைது செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment