Saturday, March 28, 2020
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 28
திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.
இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உழவர்சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 25 கடைகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று காய்கறிகளை வாங்கும் வகையில் அதற்கென்று கட்டங்கள் வரையப்பட்டுள்ளது. அதில் வரிசையாக மக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த சந்தை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 2 30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சி காந்தி சந்தை வரும் 30ம் தேதி முதல் பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் உழவர் சந்தைகள், காந்தி சந்தை மாற்றம்.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உழவர் சந்தைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்ப்பதற்காக இத்தகைய முடிவு அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அனைத்து தரப்பு மக்களும் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டத்தில் காந்தி சந்தை நிரம்பி வழிந்தது.
இதைத் தொடர்ந்து காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். கடைக்காரர்கள் மட்டுமே அந்த காய்கறி செல்லவேண்டும் வாங்கி செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும் மக்கள் கூட்டம் குறையவில்லை.
இதனால் வேறு வழியின்றி உழவர் சந்தைகளை மாற்று இடத்தில் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது .
இந்த வகையில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றி ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...


0 comments:
Post a Comment